மனிதா! மனிதா!!

0
25
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

நீ இறந்த பின்,
பிணத்தை இப்படி கொண்டு வாங்க..
அப்படியே மெதுவாக வைங்க..
என
நீ யாருக்காக வாழ்ந்தாயோ
அவர்கள் கூட
உன் பெயரை சொல்லி
அழைக்க போவதில்லை..
படைத்தவனை நோக்கி
நம் வாழ்வு அமையாமல்
படைப்புகளை நோக்கி அமைந்து
என்ன பயன்?

இந்த வாழ்வை
ஒரு வாய்ப்பாக கருதி
நோ் வழியில்
எவ்வளவு சம்பாதிக்கமுடியுமோ
அவ்வளவு சம்பாதியுங்கள்.
நீங்கள் விரும்பிய வண்ணம்
முடிந்த அளவுக்கு
செலவு செய்து
அதற்கு மரியாதை கொடுங்கள்.
சொந்தமும் நட்பும் சூழ
மகிழ்ந்து ஆடிபாடுங்கள்.
வாய்விட்டு சிரியுங்கள்
வயிறு வலிக்கட்டும்.
இன்னா செய்தோரையும்
குழந்தை மனத்தோடு
குதுகலமாய் மன்னித்துவிடுங்கள்.

மரணம் ஒரு நாள் வரதான் செய்யும்
அது ஒன்றும் பேரிழப்பல்ல,
வாழுங்காலத்தில் நடைபிணமாய்
வாழ்வதுதான் மிகப்பெரிய பேரிழப்பு..
வாழும்போது மட்டும் அல்லாமல்
மரணித்த பின்னும்
அனைவர் உள்ளத்திலும் வாழ்வதுதான்
நம் வாழ்விற்கே சிறப்பு.

-ஆ.கார்த்திகேயன்

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்