தப்பா யோசிக்காதீங்க

       இந்தியாவில் முதல் முயற்சி 11 மணி நேரத்தில் எடுத்த ஒரு படம்

                          ‘தப்பா யோசிக்காதீங்க’

ஒரு திரைப்படம் 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரைசென்னையில் ஒரு வீட்டில் படப்பிடிப்பு முடித்து  ‘தப்பா யோசிக்காதீங்க’
என்கிற ஒரு முழுப்படத்தையே 11 மணி நேரத்தில் முடித்து இருக்கிறார்கள்.

நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுல்தான்ஸ் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு -எஸ்.ஆர். வெற்றி ,  இசை- ஸ்டீபன் சதீஷ். கலை சுரா

‘தென்றல்’ தொடரில் நடிக்கும் ராஜாதான் நாயகன். ஜோதிஷா, சனிலா நாயகிகள். சிசர் மனோகர், பேபி மோனிகா மற்றும்  40 நடிகர்களும் நடித்துள்ளனர்.

இயக்குநர் சுல்தான்ஸ் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஏவிஎம்மின் 13 தொலைக்காட்சித் தொடர்களில் பணி புரிந்திருக்கிறார்.

தனக்கென ஒரு படக்குழுவை அமைத்து இன்று காலை7மணி முதல் மாலை 6 மணி வரை பம்பரமாகச் சுழன்று வேலை வாங்கியிருக்கிறார். கெடுபிடியை உணர்ந்து அனைத்து நடிகர்களும் ஒத்துழைத்துள்ளார்கள்.

‘தப்பா யோசிக்காதீங்க’ படக்கதை பற்றி இயக்குநர் சுல்தான்ஸிடம் கேட்டபோது ”ஒருமனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? பொருளாதார ரீதியாக தனிமைப் படுத்தப்படும் போது  சந்திக்கும் இன்னல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான்  சமாளிக்க எதைக் கையாள்கிறான்  என்பதை படம் விளக்கும்.
இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி உறவு உயர்வானது. அது சிறப்பாக நின்று நிலைக்க விட்டுக் கொடுத்தல் எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்.”என்றார்.

படப்பிடிப்பு அனுபவம் பற்றி சுல்தான்ஸ் கூறும்போது “இந்த ஒரு நாள் படப்பிடிப்புக்காக சரியாக யோசித்து முன்தயாரிப்புக்கு சரியாகத் திட்டமிட்டோம். ஒத்திகைகள் பல முறை பார்க்கப்பட்டன.

இதில் நடித்த நடிகர் நடிகைகள் வெவ்வேறு படங்களில் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு நாள் ஒருவர் வந்தால் மறுநாள் இன்னொருவர் வரமாட்டார். அவரவர்க்கு வேலைகள் அப்படி. ஆனாலும் படப்பிடிப்பு நாளில் இன்று எல்லாரும்  சரியாக வந்து நடித்து ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக முடித்து விட்டோம். பொதுவாக இப்படி விரைவாக எடுக்கும் படங்களில் டாக்கி போர்ஷன்தான் எடுக்கப் படும். இதில் 2பாடல்  காட்சிகளையும் எடுத்திருக்கிறோம். “என்றார்.

தயாரிப்பாளர் அனில் குமார் கூறுகையில் ” இயக்குநரின் திறமையையும் திட்டமிடலையும் நம்பி னேன். செய்து காட்டி விட்டார்.” என்றார்.

படப்பிடிப்பு முடிந்ததும். படக்குழுவினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். தயாரிப்பாளருக்கு பேச்சே வரவில்லை. ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது.

நாயகன் ராஜா கூறும் போது ” சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பலரிடம் படக்குழு கெடுபிடியாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ” என்றார்.

SIMILAR ARTICLES

பரபரப்பான படப்பிடிப்பில் “ ஒரு மெல்லிய கோடு “

0 7

நடன இயக்குனர் சம்பத்ராஜ் இயக்கும் “ இனி அவனே “

0 9

காவல் என்று பெயர் மாற்றப் பட்ட “நீயெல்லாம் நல்லா வருவடா”

0 8

“யோக்கியன் வாரான் செம்பதூக்கி உள்ள வை “படத்தின் பாடல் பதிவு

0 6

NO COMMENTS

Leave a Reply